Monday 4 August 2014

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 26


***

உடல் நிலை
குன்றிய நிலையில் 
குளிர் பிரதேசத்தில் நான்

உள்மனதில்
அன்றொருநாள்
அம்மா சமைத்து
ஊட்டிய
சமையலின் வாசம்

***

அங்கே நீ
இங்கே நான்
இரு போர்வை
ஈருறக்கம்
கனவுகள் மட்டும்
ஒன்றாய்

***

நுணல் தன்
துணைதேடும்
மழைநாள்

வயல்வெளி
திருவிழாவாகிறது

***

ஒரு
மெழுகுவர்த்தியின்
முனையில்
உயிரை
மாய்த்துக்கொள்கிறது

உனக்காக
இதுவரை எழுதிய
எனது காதல்
கடிதங்கள்

***

உன்
பட்டுப் பாவடையில்
வண்ணத்துப் பூச்சி
இருக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்

***

இன்னும்
எழவில்லை
சூரியன்

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது
சூரியகாந்தி

***

எதற்கு நீ
என்னைச் சுற்றுகிறாய்
என்று காரணம்
கேட்டபோதெல்லாம்

பூமி எதற்கு
தன்னைச் சுற்றுகிறது
என்று காரணம்
கேட்டவன் நீ

***

ஏக்கத்தோடு கூவும்
என் வீட்டு
வேப்பமரத்துக்
குயிலின் குரல்
அமெரிக்காவரை
கேட்கிறது

அம்மாவின்
கைபேசி வழியாக

***

கண்கள்
அறிந்திராத காதல்
காற்றுவழி
மகரந்தச் சேர்க்கை

***

உன் வீட்டு
ஜன்னல்
கதவுகளைச்
சாத்தி வைக்காதே

தென்றலாவது
தீண்டிவிட்டுப்
போகட்டும்

***

7 comments:

  1. வணக்கம்
    குட்டிக்கவிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் தோழர் :)

      Delete
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிறப்பான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் தோழர் :)

      Delete