Tuesday 16 October 2012

அந்த முத்தம் போல் இல்லையடி

உன் தந்தைக்கு பயந்து
தாயை சமாளித்து
தம்பியிடம் பொய் சொல்லி
ஐநூறு மயில்களுக்கு
அப்பால் இருந்து

பட்டும் படாமல்....

அந்த நள்ளிரவில் தந்த
ஒற்றை முத்தம் போல்
இல்லையடி..

இன்று என் அருகில் இருந்து
நீ தரும் ஆயிரம் முத்தங்கள்..!

9 comments:

  1. அது களவு!
    இது கற்பு!

    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... உண்மை உண்மை அருணா செல்வம் :)

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தமிழ்செல்வி :)

      Delete
  3. உண்மதான்
    பிரிவில்தான் தெரிகிற உண்மையான பாசம் அருகில் இருக்கும் போது தெரிவதில்லை

    ReplyDelete
  4. Replies
    1. மிக்க நன்றி நண்பரே சிட்டுகுருவி :)

      Delete
  5. பட்டும் படாமல் வருடும் வரிகள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சசிகலா :)

      Delete