Wednesday 20 March 2013

பரதேசியும் எமவாசியும்

30 வருடங்கள் மூச்சுவிடாமல்
அங்கே அகிம்சையில் அறப்போர் நடத்தி
தந்தை செல்வா தோற்றதனால்
ஆயுதத்தோடு அவதரித்தான் ஒருவன்
அவன்தான் பிரபாகரன்

இங்கே நடக்கும் உங்கள் ஈன அரசியலால்
இன்னும் ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள்
அவதரித்து விடுவார்களோ என்று
என் அடிமனது அடித்துக் கேட்கிறது

அன்னை அன்னை என்று சொன்னவளே
எம் இனத்தின் ஒட்டுமொத்த இழப்பிற்கு
துணைபோன எமவாசி

தமிழ் தமிழ் என்று சொன்னவனே
தமிழச்சி மார் அறுக்கத்
துணைபோன பரதேசி

அடே அயோக்கியப்பயலே...

உயிரைக் கொன்று ஊனைத் தின்னும்
உள்நாட்டுக் கழுகுகளே
இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..

இல்லையேல்...

எம் மாணவர்படை
உன்னை சுட்டெரிக்கும் சூரியனாகும்
உனக்கு சாகும் முன்னே சமாதி கட்டும் !

அன்புடன்,
அகல் 

7 comments:

  1. விரைவில் நல்லது நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் நடக்கும்... நடக்க வேண்டும்.. நன்றிகள் தனபாலன் சார்..

      Delete

  2. வணக்கம்!

    வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளீா்!
    வாழ்த்துக்கள்!

    ஓங்கி உரைத்தீா்! உறங்கும் தமிழ்ச்செவிகள்
    வீங்க உரைத்தீா் விரைந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி ஐயா...

      Delete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. வணக்கம்

    23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்அருமையான கவிதை அர்த்தம்முள்ள கவி வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்திற்கு மிக்க நன்றி ரூபன்..

      Delete