Sunday 24 March 2013

தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல !



வணக்கம் !

கடந்த சில நாட்களில் ஈழ விடுதலைக்காக ஒரு பெண் உட்பட சில தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். பண்டார நாயக்க முதல் ராட்சச மிருகம் ராஜபக்சே வரை இலங்கையில் தமிழனை சிங்களவன் தொடர்ந்து அடித்தான், துன்புறுத்திக் கொன்றான். ஈழத் தமிழனே காட்டிக் கொடுத்தான். இது போததென்று தமிழனை அழிக்க தமிழகம் துணைபோனது. இந்தியா துணைபோனது. இதுவெல்லாம் போதாதென்று இப்போது உலக அரசியல் துணைபோகிறது.

இத்தனை பேரையும் சமாளித்து வெல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.

நீங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் அதை ஒட்டுச் செய்தியாக போடக்கூட ஊரில் ஒரு ஊடகம் இல்லை. நீ செய்யும் உயிர்த் தியாகத்திற்கு உலகில் ஒரு துளியேனும் மதிப்பில்லை. இத்தனை சொல்லியும் சாக வேண்டுமென்று எண்ணினால், வாடா தோழா வா, களத்தில் நின்று களமாடிச் சாவோம். தற்கொலை செய்துகொண்டு சாக தமிழன் என்றும் கோழையல்ல !


இனம் படும் வலி, இளம் ரத்தம், இவ்வளவு பெரிய போராட்டம், நினைத்திருந்தால் பொதுச் சொத்துக்களை எரித்திருக்கலாம், அலுவலகங்களை ஆயிரம் துண்டுகளாய் உடைத்திருக்கலாம், ஆனால் அகிம்சை வழியில் உலகை உலுக்கியது நம் மாணவர் போராட்டம். இங்கே கண்ணியம் காத்த எம் கட்டபொம்மன், கரிகாற் பெருவளத்தானின் பேரன்களுக்கு எனது வீர வணக்கம். இது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம். எழுதப்படும் வரலாறின் முதல் வரி !


போராட்டம் தொடரட்டும்...


அன்புடன்,

அகல் 

3 comments:

  1. அந்த மிருகத்திற்கு அந்த எண்ணம் வர வைக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் தனபாலன் சார்..

      Delete
  2. alzakak sonenka akal..tharkolai kolzai thanam than..poraduvom nam uravukalukaka..

    ReplyDelete