Wednesday 17 April 2013

Wings Photography - புகைப்பட விரும்பிகளுக்கான ப்ளாக் Don't miss it !

நண்பர்களுக்கு வணக்கம் !

கடந்த சில மாதங்களாக இந்த பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என நான் எழுதிய படைப்புகளைப் பதிவு செய்து வருகிறேன். அதை தொடந்து படித்து, கருத்துகளைக் கூறி ஊக்கப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. எழுத்தின் மீது எனக்கு எந்த அளவிற்கு ஆர்வமோ அதே அளவிற்கு புகைப்படம் எடுப்பதிலும் உண்டு. ஆனால் நான் இதுவரை எடுத்த புகைப்படங்களை ஒரே இடத்தில் பதிவு செய்ய முயற்சித்ததில்லை. ஆகையால் இதுவரை நான் எடுத்த புகைப்படங்களை Wings Photography என்ற வலைப்பூவைத் தொடங்கி பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பதிவு செய்வேன். நண்பர்கள் வலைப்பூவிற்கு வந்து புகைப்படங்களைப் பார்த்துவிட்டு கருத்துக்களைக் கூற வேண்டுகிறேன்.



விரும்பினால் எனது முகநூல் பக்கத்திலும் இணைத்துகொள்ளுங்கள்.

எனது புகைப்படத்திற்கான முகநூல் பக்கம்: Wings Photography
எனது எழுத்திற்கான முகநூல் பக்கம்: காக்கைச் சிறகினிலே

நன்றி !


அன்புடன்,
அகல்

9 comments:

  1. புதிய தளம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. உங்களது எழுத்து நடை அருமை தோழர்.எண்ணங்களை வெளிப்படுத்திவதில் உங்களது எழுத்து அருமை தொடர்ந்து நான் கவனித்து வந்த காரணத்தால் உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
    உங்களுக்கு இருக்கும் ஆற்றலை சமுதாய நலன் சார்ந்து செயலாக்கினால் நாடு நாளை உங்களை வணங்கும் தோழரே!
    இளைஞர்கள் கொலை காரர்களாகவும் கொள்ளைக்காரனகவும் பாலியல் குற்றம் செய்பவனாகவும் திருடர்களாகவும் மாற்றுவதே காட்சி ஊடகங்கள் தான் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல கடந்த சில மதங்கள் முன்னர் கொள்ளையில் ஈடுபட்ட பலரது வயது 15 முதல் 20 க்குள் தான் இருக்கின்றது. கொள்ளைக்காக அவர்கள் கூறும் காரணம் தோழியுடன் ஊர் சுற்றவும் டிஸ்கோதே போன்ற கிளப்புகளுக்கும் பணம் கட்டவே என்பதாகும் அதில் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவன். இளைய சமுதாயத்தை சீரழிக்கும் காட்சி ஊடகங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் பிள்ளைகளுக்கு அவசியம் தேவை தோழரே. ஒரு இளைஞனாவது காப்பாற்றப் படுவான். இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பினும் எதிர்கால இளைஞர்களின் நலன் கருதி இந்திய நாட்டின் மனித வளம் காக்க சீரிய சமுதாயப் பனி செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    நட்புடன் பாலசுப்ரமணியன்

    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
    Replies
    1. நண்பரே... எனது எழுத்தின் மீதான உங்களது பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... கண்டிப்பாக என்னாலான பணிகளை எழுத்தின் மூலமாக நமது சமுதாயத்திற்கு செய்வேன்... உங்கள் ஊக்கத்திற்கு எனது நன்றிகள் பல..

      Delete
  4. உங்களது எழுத்து நடை அருமை...
    கவிதை,கதையில் கலக்கும் நீங்கள் போட்டோகிராபியிலும் கலக்குங்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.. முயற்சிக்கிறேன் ...

      Delete