Sunday 21 September 2014

காதலறிந்த கடலலை

கடற்கரை
மணலில்

உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்

உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ

கணநேர
மௌனத்திற்குப்
பிறகு

நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !


- அகல் 

6 comments:

  1. வணக்கம்
    அருமையன கற்பனை கண்டு மகிழ்ந்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கடல் இணைத்த காதல் இங்கு ஏராளம்..
    அருமையான கவிதை நண்பரே...

    ReplyDelete

  3. நீ எழுதியதைச்
    சட்டென்று
    அழித்துவிட்டுச்
    செல்கிறது
    கடலலை ! -
    அது பொய் என்று சொல்லவா!

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க ஐயா :)

      Delete