Monday 22 October 2012

எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 2

இந்த குட்டிக்கவிதைகளை படித்துவிட்டு, பிடித்த கவிகளை கூறுங்கள் நண்பர்களே.

புன்னகை

பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே.,
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...

உன் புன்னகையைப்
பார்க்காமல்..!



இடியும் மின்னலும்

எங்கேயோ
பெய்கிறது
மழை...

ஆனால்..,

எதிர்விட்டு
ஜன்னலில்
ஒரு மின்னல்..

என் இதயத்தில்
இடி..!



தூண்டிலில் மீன்

மீன் பிடிக்கும்
மீனவன்...

தூண்டிலில்
மீனாக..

பல முறை
கடலுக்கும்..!


மழை

கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?

இப்படி அழுகிறாள்..!


ஞாபகம்

இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,

கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,

இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...

உன் கண் சிமிட்டலை..!



அப்பா

தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...



15 comments:

  1. மழைக் கவிதை அழகு....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி :)

      Delete
  2. ஞாபகம் என்ற கவிதை அருமை. மற்றவையும்தான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. அனைத்துக் கவிதைகளும் அருமை அகல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் அருணா :)

      Delete
  4. அனைத்துக் கவிதைகளும் அருமை...

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே :)

      Delete
  5. நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே விமலன்..

      Delete
  6. malzai kavithai muthal parisai thatiyathu,....matra anaithum rasikavum vaithathu...nantikal

    ReplyDelete
  7. வணக்கம்
    கவிதைகள் ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே !

    ReplyDelete
  9. வலைச்சரம் மூலமாக அறிந்தேன். கடைசி இரண்டு கவிதை மிக மிக அருமை!

    ReplyDelete