Sunday 21 September 2014

பொய்காரன்

எனது
ரயில் பயணத்தில்

அந்த ரயிலையும்
உன் நினைவுகளையும்
அன்றி
யாரையும்
நான் துணைக்கு
அழைத்து வரவில்லை
என்று சொல்லும்
என்னைப் பார்த்து

நீ ஒரு
உலகமாக
பொய்காரன்
என்கிறது

அந்த
ஜன்னல் வழி
இடைவெளியில்
மடிவிரித்துத்
தாலாட்டிய நிலவு !


- அகல்

4 comments:

  1. கவிஞனைய்யா நீர்...
    அழகான கற்பனை..
    வடித்தவிதம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோர் கூறும் இதுபோன்ற ஓரிரு வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது.. நன்றிகள் தோழர்...

      Delete
  2. எழுதுங்கள் மேலும் வளர்ந்திட நாளும்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வாழ்த்திற்கும் கருத்திற்கும்..

      Delete