Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Saturday, 27 October 2012

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

மின்னலே படத்தில் வரும் "அழகிய தீயே" பாடலின் வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு அதே மெட்டிற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு நான் எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ.. அதே மெட்டில் பாடிப்பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள் நண்பர்களே..

ஏ அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...
உன் விரல் நகங்களை நான் தீண்ட தீண்ட
வின் மீன்கள் விழுகிறதே உன்னைக் காண... (2)

பனை மரம் போல் மனம் இறுகியதே (chorus)
அவளைப் பார்த்ததும் கண் விழி பிதுங்கியதே..

கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...

இவன் மனதில் பாரம் (chorus)
உன் மனதோ தூரம்...

எனை ஊமை யாக்கி விட்டாள்... (2)

மனதில் உந்தன் மயக்கம்
அணைத்தால் சற்று இனிக்கும்
காலம் கூடாமல் கை கூட சேராமல்
ஆளை ஏய்தாயே மனம் தங்குமா..?

மூளையில் மின்னல் வெட்டிய சத்தம் (chorus)
நாளை காதல் தேவதையின் முத்தம்
மனம் இரவின் நடுவிலே, நிலவின் ஒளியிலே
நீந்த துடிப்பதும் என்ன..?
மூங்கில் தண்டு போல் தேகம்
ஆனால் முள்ளைக் கண்களில் கொண்டாய்..

அடி அள்ளிப் பூங்கொடி,
அருகம் புல் செடி
உந்தன் தாய் மடி
தே தே தே தேட....

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

never don't insult me
when you are going marry me ..
ஏகு எ எ எ எ....

என் உயிர் ஒன்றாய் ஆக்கி (chorus)
உன்னுள்ளே நான் கலந்தேன்
உன் ஓரக்கண் பார்வையால்
என் நெஞ்சை நான் இழந்தேன்..
ஒ ஒ.. (2)

உந்தன் விரலில் எந்தன் இமை தான்
எந்தன் இமையில் உந்தன் சுமை தான்
இதயம் என் ரத்தம் வேண்டாமே என சொல்ல
வியர்வைத் துளையோடு வெளியேறுதே...

மெழுகு வார்த்த ஓர் கன்னம் (chorus)
அதுவும் தேன் கலந்த ஓர் கிண்ணம்
மனம் மார்பின் நடுவிலே
மையல் விழியிலே
வாழத் துடிப்பதும் என்ன..?

அள்ளிப் பூங்கொடி இடையும்
உந்தன் வாசம் வீசும் பல உடையும்...

மனம் இந்த நாள் வரை
வெந்து போட்டதால்
நொந்து போனது

போ.. போ.. போதும்...

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே....